Wednesday, January 18, 2006

சில முத்துக்கள்!

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!


> உனக்கு நானோ
எனக்கு நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம்
வா!


> தேவைதானா என்று
கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன்
குதித்திருக்க முடியுமா?
தூரத்தை
நெருங்கியிருக்க முடியுமா?
நேரத்தை
சுருக்கியிருக்க முடியுமா?
தேவைதான்
முட்டைக்குள் இருக்கும்
உயிரை மூச்சு விட
வைக்கிறது


> அனுபவங்களின்
தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கைமுறை
தீர்மானிக்கப்பட்ட
அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த
அனுபவங்களை
ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது
துப்பியது
ஆகவே
தாத்தாக்களின்
நகல்களாகவே தமிழன்
தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை